செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: சாத்தான்குளத்தில் திடீர் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு அழகம்மன் கோயில்தெருவில் காலியாக உள்ள இடத்தில், தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்துள்ளனர். அப்பகுதி மக்கள் நேற்று அங்கு திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கலைந்து சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3v4QaQm
via
No comments