வனப் பகுதிகளில் விலங்குகளி்ன் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி

செங்கல்பட்டு, திருப்போரூர் வனப் பகுதிகளில் உள்ள விலங்குகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், வனப் பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணிகளில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பகுதியில் 7,285 ஏக்கர், திருப்போரூரில் 5,350 ஏக்கர் பரப்பில் வனப் பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு சிறுத்தை, பல்வேறு மான் இனங்கள், கழுதைப்புலி, நரி, மயில் உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. வனப் பகுதிகள் மற்றும் விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படாமல் இருப்பதற்காக, வனத் துறையினர் சுழற்சி முறையில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uEHmAq
via
No comments