கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு- கனிமவளத் துறை, வனத் துறை பதிலளிக்க உத்தரவு

விதிகளை மீறி கல் குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என்றுகூறி தொடரப்பட்டுள்ள வழக்கில்கனிமவளத் துறை மற்றும் வனத்துறை சார்பில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுராந்தகம் தாலுகா தொன்னாடு கிராமத்தைச் சேர்ந்த ஆர்.சதிஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘வனப்பகுதியை ஒட்டியுள்ள எங்கள் கிராமத்துக்கு அருகில் கல் குவாரி அமைக்க தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அதிகாரிகள் எந்தவொரு கள ஆய்வும் மேற்கொள்ளவில்லை. கல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள 300 மீட்டருக்குள் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரி 70 மீட்டருக்குள் அமைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3g0eYVs
via
No comments