Breaking News

காஞ்சிபுரத்தில் 120 படுக்கைகளுடன் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் தொடக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதால், மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், கரோனாவுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்கும் வகையில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, அரசு சார்பில்காஞ்சிபுரம் ஏனாத்தூர் மீனாட்சிமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இந்த மையம்120 படுக்கைகளுடன் செயல்பட உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fqOWc1
via

No comments