Breaking News

போலி ரெம்டெசிவிர் மருந்தால் மருத்துவர் உயிரிழப்பு; மருத்துவமனை மீது நடவடிக்கை: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

போலியான ரெம்டெசிவிர் மருந்து செலுத்தி மருத்துவர் ராமன் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த மருத்துவமனை மற்றும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பு:

போலியான ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்பட்டதால் உயிரிழந்த மருத்துவர் ராமன் குறித்த புகார் மனு இன்று பெறப்பட்டது. இந்த புகார் மனு மீது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறைஇயக்குநர் குருநாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் சிவபாலன் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33VJn00
via

No comments