Breaking News

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகளிர், குழந்தைகள் நலப் பிரிவுக்கான புதிய கட்டிடத்தை தற்காலிக கரோனா வார்டாக மாற்ற முடிவு: ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 250 படுக்கை வசதி

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுக்கு கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை தற்காலிக கரோனா வார்டாக மாற்ற மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். இதில் ஆக்சிஜன் அளிக்கும் வசதியுடன்கூடுதலாக 250 படுக்கைகள் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.18 கோடி செலவில் மகளிர்மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுக்குபயன்படுத்த புதிய கட்டிடம் கட்டப்பட்டது.தற்போது கரோனா அதிகம் பரவி வருவதால் நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கைகள் தேவைப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தப் புதிய கட்டிடத்தை கரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் இதனை விரைவில் திறக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Rp0DaO
via

No comments