Breaking News

ஜெர்மனியின் டிரையர் பல்கலைக்கழகம் சார்பில் இந்துஸ்தான் பல்கலையிடம் ரூ.8.85 கோடி நிவாரண பொருட்கள்

நாட்டில் கரோனா தொற்று பரவத் தொடங்கிய கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் படூரில் உள்ள இந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் சார்பில் பல்வேறு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள், முன்களப் பணியாளர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

திரிஷ்யம் 4.0 என்ற திட்டத்தின் கீழ், கரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டத்தை டிரோன் விமானம் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்களை பாதுகாக்கும் நோக்கிலும், கரோனா பாதித்தவர்களை கண்காணிக்கவும் வசதியாக ‘செவிலி’ என்ற ரோபோ உருவாக்கப்பட்டு சென்னை, செங்கல்பட்டு அரசுமருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oUbmXu
via

No comments