Breaking News

இளையான்குடியில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை: கரோனா நோயாளிகளுக்காக தனது காரை ஒப்படைத்த வட்டாட்சியர்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் கரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல தனது சொந்த காரை ஆம்புலன்ஸ் சேவைக்காக வட்டாட்சியர் ஒப்படைத்தார்.

இளையான்குடி வட்டத்தில் இளையான்குடி பேரூராட்சி மற்றும் 55 ஊராட்சிகள் உள்ளன. ஆனால், ஒரே ஒரு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மட்டுமே உள்ளது. தற்போது கரோனா தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் தனியாரிடம் கூடுதலாக பணம் கொடுத்து வாடகைக்கு எடுக்கும் நிலை உள்ளது. இதனால் கிராமப்புற ஏழைகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து இளையான்குடி வட்டாட்சியர் ஆனந்த் தனது சொந்த வாகனத்தை ஆம்புலன்ஸ் சேவைக்காக `பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பிடம் ஒப்படைத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yqi1wP
via

No comments