கரோனா நிவாரண பணிகளுக்காக ரூ.1.10 கோடி நிதி முன்களப் பணியாளர்களாக வணிகர்களை அறிவிக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலினுக்கு விக்கிரமராஜா கோரிக்கை

வணிகர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர். கரோனா நிவாரண நிதியாக ரூ.1.10 கோடிக்கான வரைவோலை மற்றும் காசோலைகளை வழங்கி, கோரிக்கை மனு அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xoHPbh
via
No comments