கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்கப்படுமா? - சிறு, குறு தொழில் துறையினர் எதிர்பார்ப்பு

கோவை உட்பட ஊரடங்கு தளர்வுகள் குறைவான மாவட்டங்களில் மின் கட்டணத்தை செலுத்த தமிழக அரசு கூடுதல் கால அவகாசம்வழங்க வேண்டும் என்ற சிறு, குறுதொழில் துறையினர் எதிர்பார்க் கின்றனர்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர்,ஈரோடு உட்பட 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கில் சில தளர்வுகள்மட்டும் கூடுதலாக அறிவிக்கப்பட் டன. ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றுக்கான மூலப்பொருட்கள் தயாரித்து அளிக்கும் நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என்றும், கரோனா பாதிப்பு குறைவாக உள்ள பிற 27 மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wyI1ou
via
No comments