அரிசி குடும்ப அட்டைகளுக்கு கரோனா நிவாரணம்; இரண்டாம் தவணையாக ரூ.2 ஆயிரம்; 14 வகை மளிகைப் பொருட்கள்: நியாயவிலைக் கடைகளில் விநியோகம் தொடங்கியது

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், கரோனாவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களைப் போக்க அரிசிகுடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்று, திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கடந்த மே மாதம் 2 கோடியே 9 லட்சத்து 81,900 அரிசி குடும்பஅட்டைகளுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கும் பணியை முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினமான கடந்த ஜூன் 3-ம் தேதிமுதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அத்துடன், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்க, கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, உளுந்து, புளி, கடலைப்பருப்பு, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், டீத்தூள், குளியல் மற்றும் துணி சோப்பு என 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.844.51 கோடியில் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pXvp7S
via
No comments