Breaking News

விஐடி பல்கலைக்கழகம் சார்பில் 2-ம் தவணையாக ரூ.25 லட்சம் கரோனா நிதியுதவி

தமிழக முதல்வரிடம் விஐடி வேந்தர்கோ.விசுவநாதன் 2-ம் தவணை கரோனா நிதியாக ரூ.25 லட்சம் தொகையை வழங்கினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பெருந்தொற்று நிவாரண நிதிக்கு விஐடி பல்கலைக்கழகம் சார்பில் ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன் மற்றும் ஜி.வி.செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hhPJNq
via

No comments