Breaking News

வெளி மாவட்டங்களில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு விற்பனைக்காக கொண்டு வந்த 2 ஆயிரம் நெல் மூட்டை பறிமுதல்: 7 பேர் கைது; 7 லாரிகள் பறிமுதல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளநேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் லாரிகளில் நெல் மூட்டைகளை கொண்டு வந்து, கொள்முதல் நிலையப் பணியாளர்கள் துணையுடன் விற்பனை செய்வதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு, வியாபாரிகள் கொண்டு வரும் நெல்லை கண்காணித்து தடுக்கும் வகையில், துணை காவல் கண்காணிப்பாளர் நல்லு தலைமையிலான குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர், தஞ்சாவூர் மாவட்ட எல்லைகளில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை கண்காணிப்பில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TjP7ii
via

No comments