வாட்ஸ்அப் வழியாக வீடியோ பதிவு மூலம் கோரிக்கை; 24 மணிநேரத்தில் வீட்டுமனைப் பட்டா: பெண்ணின் வீட்டுக்கே சென்று வழங்கிய தஞ்சாவூர் ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சொர்ணக்காடு ஊராட்சி பட்டத்தூரணி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி மணியம்மை (40). குடிசை வீட்டில் வசித்து வரும் இவர், தனது வீட்டை புதுப்பித்துக் கட்ட முடிவு செய்தார். ஆனால், அந்த இடம் சம்பந்தமாக உறவினர்கள் சிலர் இடையூறு ஏற்படுத்தி உள்ளனர்.
இதையடுத்து, மணியம்மை தனது பிரச்சினைகள் குறித்து கண்ணீருடன் பேசிய வீடியோ ஒன்றை பதிவுசெய்து, அதை வாட்ஸ்அப் வழியாக பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் சீ.பாலச்சந்தருக்கு ஜூன் 18-ம் தேதி அனுப்பியுள்ளார். அதில், தனக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க ஆட்சியர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2UcJ672
via
No comments