Breaking News

காய்ச்சலுக்கு மருத்துவர்களை அணுகுவதை தவிர்த்தனர்; திருமுல்லைவாயிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை: அச்சம் ஏற்படுத்தும் ஊடகச் செய்திகள் காரணமா?

திருமுல்லைவாயிலில் வசிப்பவர் வெங்கட்ராமன்(78). இவரது வீட்டு மாடிப் பகுதியில் வெங்கட்ராமனின் தங்கை மல்லிகேஸ்வரி (64), கணவர் டில்லி(74), மகள் நாகேஸ்வரி (34) ஆகியோர் வசித்தனர். சில தினங்களாக இவர்கள் 3 பேருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கரோனா அச்சம் காரணமாக கரோனா பரிசோதனை செய்துகொள்ளாமல் மருந்து கடையில் மருந்து வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதேபோன்று சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூரை அடுத்த கசுவா என்ற கிராமத்திலும் ஒரு முதியவர் தனது இரு மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cgWPzZ
via

No comments