Breaking News

அரசு நிலத்துக்கு போலி பட்டா தயாரித்து ரூ.33 கோடி இழப்பீடு பெற்றது தொடர்பாக 2 பேர் கைது

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக அரசு நிலத்துக்கு போலி பட்டா தயாரித்து ரூ.33 கோடி இழப்பீடு பெற்ற விவகாரத்தில் இருவர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச் சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கான நில எடுப்பின்போது தனியார் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. அப்போது 2000-ம் ஆண்டில் பீமன்தாங்கல் கிராமத்தில் அரசு நிலத்தை தனியார் நிலம்போல் பட்டா பெற்று ஆசிஷ் மேத்தா என்பவர் ரூ.30 கோடியும், செல்வம் என்பவர் ரூ.3 கோடியும் இழப்பீடு பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Usi2kk
via

No comments