பாசிசத்தின் பேரழிவுகளை அனைவரும் அறிய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு அறிவுறுத்தல்
இரண்டாம் உலகப் போரில் பாசிசசக்திகளால் விளைந்த பேரழிவுகளை மக்களும் மாணவர்களும் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் 1941 முதல் 1945 வரை ஹிட்லரின் ஜெர்மனிக்கு எதிரான போரில் அன்றைய சோவியத் ஒன்றியத்துக்கு இந்தியா எப்படியெல்லாம் ஆதரவளித்தது என்பதை விளக்கும் வகையில் எல்.வி.மித்ரோகின் ‘ஃபிரெண்ட்ஸ் ஆஃப் தி சோவியத் யூனியன்’ என்னும் நூலை எழுதியுள்ளார். இது கடந்த ஆண்டு ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது. தற்போது திரைப்பட இயக்குநரும் இந்திய-ரஷ்ய கூட்டுத் தயாரிப்பு நிறுவனமான ஆர்.யு.ஆர்.ஓ. இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான கே.ராஜேஷ்வர் ‘பாசிச அழிப்பு: இந்தோ-ரஷ்ய நட்புறவு’ (டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு) என்கிற பெயரில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்திய-ரஷ்யதொழில்-வர்த்தக சபையும் சென்னை ரஷ்ய கலாச்சார மையமும் இணைந்து இந்த நூலின் இணையவழி வெளியீட்டு விழாவை செவ்வாய்க்கிழமை நடத்தின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vTUNNf
via
No comments