Breaking News

சிற்ப விற்பனை நிறுவனங்கள் சார்பில் 4,000 குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசி

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சி மற்றும் திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஒன்றிய கிராமங்களில் ஊரடங்கு உத்தரவால் நலிவடைந்தகுடும்பத்தினர், கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் ஆகியோர் வாழ்வாதாரம் இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்பகுதி களைச்சேர்ந்த 4,000 குடும்பத்தினருக்கு உதவும்வகையில் அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ‘லோட்டஸ் ஸ்கல்ப்ச்சர்ஸ்’ என்ற சிற்பங்களை விற்பனைசெய்யும் நிறுவனத்தின் தலைவர்கெயில் டோர்டோரா மற்றும் மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்தபாபா ஸ்டோன்ஸ் சிற்பக்கலைகூட நிறுவனரும் சிற்பக் கலைஞருமான பாலன் அறிவுமணி ஆகியோர் இணைந்து, ஏழை மக்களின் குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அளவு கொண்ட அரிசி மூட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3w1MW15
via

No comments