சென்னையில் காவலர்களிடம் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்; போலீஸாருக்கு ‘பாடி வோன் கேமராக்கள்’- மீண்டும் வழங்க காவல் துறையினர் கோரிக்கை

சென்னையில் அடுத்தடுத்து போலீஸாரிடம் நடைபெறும் அத்துமீறல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் களத்தில் உள்ள அனைத்து போலீஸாருக்கும் பாடி வோன் கேமராக்களை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீஸாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது ஆங்காங்கே வழக்கமாகி விட்டது. இதில், இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சுமத்துவார்கள். இதனால், யார் தரப்பில் உண்மை உள்ளது என்பதை துல்லியமாகக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீஸார் வாகன ஓட்டிகளிடம் நடத்தும் விசாரணைகள் குறித்து அறிய நவீன ‘பாடி வோன் கேமராஸ்' (Body worn Cameras) திட்டம் சென்னையில் காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் இருக்கும்போது 3 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/351SigA
via
No comments