Breaking News

அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து ஆட்டோ ஓட்டுநர் கைது: உண்மைக்கு மாறான காரணம் கூறி இ-பதிவு பெற்று இயக்கப்பட்ட ஆட்டோ பறிமுதல்

ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவரிடம் கடும் வாக்குவாதம் செய்த விவகாரம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரோனா இரண்டாவது அலை பரவலை முற்றிலும் தடுக்க தமிழக அரசு மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. பேருந்துகள், வாடகை ஆட்டோக்கள், டாக்ஸிகள் இயக்க அனுமதிக்கப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2T8NBio
via

No comments