Breaking News

திருவாரூரில் வணிக வளாக உரிமையாளர் கொலை; ஏடிஎம் கொள்ளையை தடுக்க முயன்றபோது சம்பவம்: 4 கொள்ளையர்கள் கைது

திருவாரூர் அருகே உள்ள கூடூரைச் சேர்ந்தவர் தமிழரசன் (60). அங்கு அவருக்குச் சொந்தமான வணிக வளாகம் உள்ளது. அந்த வளாகத்திலேயே தமிழரசனின் வீடும் உள்ளது. இந்த வணிகவளாகத்தில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த ஏடிஎம் மையத்தில் இருந்து சத்தம் வந்ததால், தமிழரசன் வெளியே வந்து பார்த்தார். அப்போது, வெல்டிங் வைக்க பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர், கடப்பாறை உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை 4 பேர் உடைத்து, கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xEUash
via

No comments