கோட்டூர்புரத்தில் சாலையோரம் காத்திருந்த பட்டதாரிகளை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்: சமூக வலைதளங்களில் வரவேற்பு

சாலையோரம் காத்திருந்த பட்டதாரிகளை கவனித்து, தனது வாகனத்தை நிறுத்தி, முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டதற்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கலந்துகொண்டார். நிகழ்ச்சிமுடிந்தபின் தனது காரில் தலைமைச் செயலகத்துக்கு சென்றுகொண்டு இருந்தார். அப்போது பட்டதாரிகள் சிலர் கோரிக்கை மனுக்களுடன் காந்தி மண்டபம் சாலையில் காத்திருப்பதை பார்த்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cTFCNn
via
No comments