Breaking News

தமிழகம் முழுவதும் கடந்த 7 நாட்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவை மீறிய 1 லட்சம் வாகனங்கள் பறிமுதல்: போலீஸ் கண்காணிப்பு மேலும் தீவிரமாகிறது

ஊரடங்கை மீறியதாக கடந்த 7 நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் போன்றவற்றுக்கும் அனுமதி இன்றி தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு வரும்7-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். முன்களப் பணியாளர்கள், அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைப் பணியாளர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RdGULz
via

No comments