Breaking News

7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

`கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்வோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்’ என, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆட்சியர் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. கடந்த இரு மாதங்களில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தை திருமணத்தை நடத்தியவர்கள் மற்றும் குழந்தை திருமணம் நடத்த தூண்டியவர்கள், குழந்தை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள், அச்சக உரிமையாளர்கள், மந்திரம் ஓதுபவர்கள், மண்டப உரிமையாளர்கள் உட்பட அனைவரும் குற்றவாளிகள் ஆவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yW5qlp
via

No comments