Breaking News

தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று

இந்தியாவில் கரோனா முதல் அலையின்போது ஆல்ஃபா வகை வைரஸ் காணப்பட்டது. இரண்டாவது அலையின்போது வைரஸ் தன்னை வீரியமிக்கதாக உருமாற்றிக் கொண்டு பரவத் தொடங்கியது. இந்தியாவில் 2-வது அலையின்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸை டெல்டா கரோனா வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியது.

இதையடுத்து, இந்த புதிய வைரஸ் குறித்த ஆய்வை மேற்கொள்ள முடிவு செய்த தமிழக சுகாதாரத் துறை, தடுப்பூசி செலுத்தியும் பாதிக்கப்பட்ட 1,159 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு மரபணு ஆய்வகத்துக்கு அனுப்பியது. இதில் 554 மாதிரிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, 386 பேருக்கு (70 சதவீதம்) டெல்டா வகை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானோர் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் ஆவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35B8Hcq
via

No comments