செங்கல்பட்டு மற்றும் குன்னூர் நிறுவனங்களில் தடுப்பூசி தயாரித்தால் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கும்: இணையவழி கருத்தரங்கில் தமிழக மருத்துவத் துறை அமைச்சர் கருத்து

செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை தடுப்பூசி எச்.எல்.எல். நிறுவனத்தை செயல்படுத்த வலியுறுத்தியும் தற்போதைய சூழலில் திமுக அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு மத்திய பாஜக அரசு முழு ஒத்துழைப்பும், ஒப்புதலும் வழங்க வேண்டியும் சிஐடியுவின் செங்கல்பட்டு மாவட்டக் குழு ஏற்பாடு செய்திருந்த இணையவழி கருத்தரங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த இந்நிகழ்வில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கேரள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.சைலஜா, மார்க்சிஸ்ட் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராசன், மருத்துவர் ரெக்ஸ் சற்குணம், சிஐடியு மாநில துணைச் செயலாளர் எஸ்.கண்ணன், மாவட்ட தலைவர்கள் கே.சேஷாத்ரி, பகவத்சிங் தாஸ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SS8sqq
via
No comments