Breaking News

ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு 960 மதுபாட்டில்கள் கடத்தல்: சரக்கு வேனில் எடுத்து வந்த 3 பேர் கைது

ஆந்திராவிலிருந்து, தமிழகத்துக்கு சிறிய சரக்கு வேனில் 960 மதுபாட்டில்களை கடத்தியது தொடர்பாக சென்னையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் தற்போது தளர்வற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள ஆந்திர மாநிலப் பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளுக்கு திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிள்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் சென்று மதுபாட்டில்களை வாங்கி, அங்கிருந்து தமிழகத்துக்கு கடத்தி வந்து, பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். இதைத் தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RmGhiI
via

No comments