Breaking News

தண்டரை சித்த மருத்துவ சிகிச்சை முகாமில் பெரும்பாலானோர் குணமடைந்ததால் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது: சித்த மருத்துவர்கள் பெருமிதம்

திருக்கழுக்குன்றத்தை அடுத்த தண்டரை கிராமத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட சித்த சிகிச்சை மையத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்படமாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pyW1Mt
via

No comments