சென்னை குடிநீருக்காக கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் தமிழக எல்லைக்கு வந்தது: பால்வளத் துறை அமைச்சர் மலர் தூவி வரவேற்றார்

சென்னை குடிநீருக்காக, ஆந்திரமாநிலம்- கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் நேற்று காலை தமிழக எல்லைக்கு வந்தது. அதை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.
சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீரை திறக்க வேண்டும் என சமீபத்தில் ஆந்திர அரசிடம், தமிழக அரசுகோரிக்கை வைத்தது. அதன் விளைவாக, சென்னை குடிநீருக்காக கடந்த 14-ம் தேதி காலை முதல், கண்டலேறு அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி கிருஷ்ணா நீரை, கிருஷ்ணா கால்வாயில் ஆந்திர அரசு திறந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3q3Nmlq
via
No comments