Breaking News

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது; போக்குவரத்து அதிகரிப்பு; கடைகளில் குவிந்த மக்கள்: குறைந்துவரும் தொற்று மீண்டும் அதிகரிக்கும் என ஆர்வலர்கள் எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு,தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகள்திறக்கப்பட்டதால் சாலைகளில் வாகனப் புழக்கம் அதிகரித்துள்ளது. கடைகளில் அதிக அளவு மக்கள் கூடுவதால், கரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு கடந்த மே 24-ம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. 2 வாரங்களாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நேற்று காலையுடன் முடிவடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Sh7ST0
via

No comments