Breaking News

யூரோ கால்பந்து தொடர்- கால் இறுதியில் நுழைந்தது இத்தாலி அணி

யூரோ கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில் ஆஸ்திரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால் இறுதியில் கால்பதித்தது இத்தாலி அணி.

யூரோ கால்பந்து தொடரில் நேற்று லண்டனில் நடைபெற்ற நாக்-அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி - ஆஸ்திரியா அணிகள் மோதின. 67-வது நிமிடத்தில் ஆஸ்திரியாவின் டேவிட் அலபா தலையால் முட்டிய பந்தை கோல்கம்பத்துக்கு மிக அருகே நின்ற மார்கோ அர்னாடோவிக் கோல் வலைக்குள் திணித்தார். ஆனால் இது ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. நிர்ண யிக்கப்பட்ட 90 நிமிடங்களுக்குள் இரு அணிகள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படாததால் வெற்றியை தீர்மானிக்க 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xZBHql

No comments