Breaking News

டெல்டா மாவட்டங்களில் முடிவடையாத தூர்வாரும் பணிகள்: மேட்டூர் அணை திறப்பு தள்ளிப் போகுமா?

காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு தள்ளிப்போகும் வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். அப்போது, சுமார் 1.35 லட்சம் ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fCZTIH
via

No comments