Breaking News

பேரறிவாளன் விடுதலை: தீர்ப்பை தள்ளிவைத்தது உச்ச நீதிமன்றம் - ஆளுநர் அரசியல் சாசன பிழை செய்ததாக தமிழக அரசு குற்றச்சாட்டு

புதுடெல்லி: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் மிகப்பெரிய அரசியல் சாசன பிழையை செய்துவிட்டார் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடுமையாக குற்றம் சாட்டியது. இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “குடியரசுத் தலைவரும், ஆளுநரும் சட்டத்துக்கு உட்பட்டவர்களே. பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு உரிய முடிவை எடுக்காவிட்டால் அவரை விடுவிப்பது குறித்து நாங்கள் பரிசீலிப்போம். இதுதொடர்பாக குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டத்துக்குட்பட்டு பேரறிவாளன் விவகாரத்தில் நாங்கள் இறுதி முடிவை எடுப்போம்” என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/B9nxZrC
via

No comments