Breaking News

ஒரு கிலோ முள்ளங்கி ஒரு ரூபாய்க்கு கொள்முதல்: இடைத்தரகர்களின் தலையீட்டால் விவசாயிகள் வேதனை

இடைத்தரகர்கள், மொத்த வியாபாரிகளின் தலையீட்டால், உடுமலையில் ஒரு கிலோ முள்ளங்கிஒரு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், அரசே விலையை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலையில் உள்ள ஜக்கம்பாளையம், கல்லாபுரம், ஆண்டியகவுண்டனூர், அமராவதி, கண்ணமநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பலர், முள்ளங்கி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். 2 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் என்பதால் சிறு, குறு விவசாயிகளின் தேர்வாக முள்ளங்கி மாறியுள்ளது. தற்போது, அறுவடை தொடங்கியுள்ளதால், சந்தைக்கு வரும் முள்ளங்கியின் வரத்து அதிகரித்துள்ளது. 50 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை முள்ளங்கி, ரூ.50-க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vwEZ2N
via

No comments