Breaking News

சென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை மாநகராட்சி குறைக்கக் கூடாது: வல்லுநர் குழு பரிந்துரை

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், அன்றாடம் செய்யப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாதுஎன்று மாநகராட்சிக்கு வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று குறைந்துவரும் நிலையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய கரோனா தடுப்புமற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வல்லுநர் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gsoFdL
via

No comments