Breaking News

முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வருமா?- மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழகத்தில் முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், கடந்தமே 24-ம் தேதி முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது அடுத்தடுத்து 3 கட்டங்களாக ஜூன் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தவிர,கரோனா பரவல் அதிகமாக உள்ள திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் என 11 மாவட்டங்களில் அடிப்படை பணிகளுக்கான தளர்வுகளும், எஞ்சியுள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wFm8Ul
via

No comments