நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை; வனப் பகுதிகளில் பசுமை திரும்பியதால் முதுமலை திரும்பிய வன விலங்குகள்: போக்குவரத்து இல்லாததால் சாலையில் திரியும் யானைகள்

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால், வனப்பகுதியில் பசுமை திரும்பியுள்ளது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிலவிய கடும் பனிப்பொழிவால், வனங்களில் பசுமை குறைந்து வறட்சி நிலவியது. பின்னர், வனப்பகுதியில் கோடை வெப்பமும் அதிகமாக இருந்ததால், தண்ணீர் மற்றும் உணவு தேடி, வனவிலங்குகள் கர்நாடக, கேரளவனப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vFogKP
via
No comments