Breaking News

கரோனாவால் இறந்தோரின் உடல்களை தத்தனேரி, மூலக்கரை மயானங்களில் இலவசமாக எரிக்கலாம்: வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

கரோனாவால் இறந்தவர்களின் உடல்களை தத்தனேரி மற்றும் மூலக்கரை மயானங்களில் இன்று முதல் ஒரு மாத காலத்துக்கு மட்டும் இலவசமாக எரியூட்ட மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது என்று வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி சார்பில் மீனாட்சியம்மன் திருக்கோயிலில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ்சேகர் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் முன்னிலை வகித்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vPih72
via

No comments