தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத திட்டங்களையும் அறிவித்து நிறைவேற்றி வருகிறார் ஸ்டாலின்: பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்

தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத திட்டங்களையும் அறிவித்து நிறைவேற்றி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-ம் கட்ட கரோனா நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை நிவாரண பொருட்கள் வழங்கும் திட்டம் திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள நியாய விலைக் கடையில் நேற்று காலை நடைபெற்றது. பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான நிவாரணப் பொருட்களை வழங்கி பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cGN66c
via
No comments