Breaking News

தனியார் பள்ளிகள் கட்டணத்தில் கறார்; நெருக்கடியில் பெற்றோர்

கரோனா தொற்றால் ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ‘ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்றாலும், தொடர்ந்து முழுக்கட்டணத்தையே செலுத்துமாறு தனியார் பள்ளிகள் வற்புறுத்துகின்றன. ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கடந்த ஆண்டு கட்டணத்தை முழுவதுமாக செலுத்த முடியவில்லை. நடப்புக் கல்வி ஆண்டிலும் இதேநிலை தொடர்வதால் பெற்றோர் தவிப்பில் உள்ளனர்.

“தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டு மின் கட்டணம், பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்கள் பெருமளவு மிச்சமாகியுள்ளது. பல பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகளை சில ஆசிரியர்களைக் கொண்டே நடத்துகின்றனர். அவர்களுக்கும் பாதி ஊதியமே தருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gWTwkf
via

No comments