Breaking News

‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தைக்கு நான் எதிரானவன் இல்லை: கொமதேக எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன் விளக்கம்

‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தைக்கு நான் எதிரானவன் இல்லை என கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நடந்த, தமிழக சட்டப்பேரவைத் கூட்டத் தொடரில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசினார். அப்போது, ‘‘கடந்தாண்டு ஆளுநர் உரையின் முடிவில், ‘நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த்’ என முடிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது ஆளுநர் உரையின் முடிவில், ‘நன்றி, வணக்கம்’ மட்டுமே இருந்தது. ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இல்லை. தமிழகம் தலை நிமிரத் தொடங்கிவிட்டது’’ என்று தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gUnwNz
via

No comments