Breaking News

திருநீர்மலை கோயிலில் ரோப் கார் வசதி: அறநிலையத் துறை அமைச்சர் ஆய்வு

திருநீர்மலை மலைக்கோயிலில் ரோப் கார் வசதியை ஏற்படுத்துவது தொடர்பாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் சோளிங்கர் நரசிம்மர் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில், திருநீர்மலை ரங்கநாதபெருமாள் கோயில், மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில், திருத்தணி முருகன் கோயில் ஆகிய 5 கோயில்களில் ‘ரோப் கார்' அமைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரோப் கார் வசதி ஏற்படுத்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3q5fSms
via

No comments