Breaking News

102 போலீஸாருக்கு ஆணையம் சம்மன்

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூடு, தடியடி மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கெனவே 27 கட்ட விசாரணை நடந்துள்ளது.

ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த மே மாதம் வழங்கினார். அதன் அடிப்படையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை, வழக்குகளில் சிக்கி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை உள்ளிட்டவற்றை தமிழக அரசு வழங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2UYMYJe
via

No comments