Breaking News

மக்கள் அதிகம் கூடும் கோயம்பேடு, காசிமேடு உள்ளிட்ட 20 இடங்களை கண்காணிக்க மாநகராட்சி திட்டம்

சென்னையில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிகம் கூடும் கோயம்பேடு, காசிமேடு உள்ளிட்ட 20 இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் 5-ம் தேதி (இன்று) முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் கரோனா தொற்று பரவல் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக கோயம்பேடு காய்கறி வியாபாரிகள், காசிமேடு மீனவ சங்கங்கள், ஓட்டல் மற்றும் வணிக வளாக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TD4mTF
via

No comments