கடந்த 17 நாட்களில் ரயில் மூலம் திருப்பூருக்கு வந்த வட மாநில தொழிலாளர்கள் 9,000 பேருக்கு கரோனா பரிசோதனை: 11 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி
வட மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலமாக திருப்பூருக்கு வந்த 9 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
கரோனா தொற்று முதல் அலை பரவலின்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டதால், பெரும்பாலான வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் திறக்கப்பட்டபோது, குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டுமே திரும்பி வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BfzgCz
via
No comments