2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகளை பெற வேண்டும்: முதல்வருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டு இறுதிக்குள் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து 96 கோடி டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. இதுதவிர ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிக்கல்-இ நிறுவனம் கோர்பேவாக்ஸ் என்ற புதிய தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி கரோனாவுக்கு எதிரான போரில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும், 90 சதவீத செயல்திறன் கொண்டுள்ளது என்றும், வரும் அக்டோபரில் இருந்து பயன்பாட்டுக்கு வரும் எனவும் தகவல் வந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3krW38e
via
No comments