Breaking News

ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய தடகள அணியில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 26 பேருக்கு இடம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான 26 பேர் கொண்ட இந்தியதடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் பங்கேற்கும் 26 பேர் கொண்ட இந்திய தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. இதில் ஆடவருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்ய ராஜ், நாகநாதன் பாண்டி ஆகியோரும் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் தமிழகத்தின் ரேவதி வீரமணி, சுபா வெங்கடேஷன், தனலட்சுமி சேகர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அணியில் இடம் பெற்றுள்ள 26 பேரில் 16 பேர் தனிநபர் போட்டிகளில் பங்கேற்கின்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகள போட்டிகள் 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wkmmQ4

No comments