யூரோ கால்பந்து தொடர் அரை இறுதியில் இங்கிலாந்து- டென்மார்க் அணிகள் இன்று பலப்பரீட்சை

யூரோ கால்பந்து தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - டென்மார்க் அணிகள் இன்று நள்ளிரவு 12.30 மணி அளவில் லண்டன் நகரில் உள்ள வெம்பிலி மைதானத்தில் மோதுகின்றன.
இங்கிலாந்து அணியானது லீக் சுற்றில் குரோஷியா, செக்குடியரசு அணிகளை வீழ்த்தியிருந்தது. அதேவேளையில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தை கோல்களின்றி டிராவில் முடித்திருந்தது. நாக் அவுட் சுற்றில் பலம் வாய்ந்த ஜெர்மனியை 2-0 எனதோற்கடித்தது. கால் இறுதிச் சுற்றில் 4-0 என்ற கணக்கில் உக்ரைன் அணியை வீழ்த்தியிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3e8Dhin
No comments