Breaking News

புதுச்சேரியில் கனமழையால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

புதுச்சேரி கிராமப் பகுதிகளான கொடாத்தூர், மணவெளி, சுத்துகேணி, சந்தை புதுக்குப்பம், கைக்கலம்பட்டு, குமாரப்பாளையம், காட்டேரிக்குப்பம் ஆகிய கிராமங்களில் 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் சாகுபடி செய்து, நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தொடங்கி அதிகாலை வரை காற்றுடன் கூடிய கனமழை புதுச்சேரியில் பெய்தது. இந்த மழையில் அறுவடைக்குதயாரான நிலையில் இருந்த நெற்பயிர்கள் சரிந்து சேதமடைந்தன. வயல்களில் மழை நீர் தேங்கி நிற்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3htAMsI
via

No comments