Breaking News

ரூ.7.15 கோடி சொத்து வாங்கிய சுற்றுச்சூழல் முன்னாள் அதிகாரி பாண்டியன், மனைவி மீது சொத்து குவிப்பு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை

வருமானத்துக்கு அதிகமாக ரூ.7.15 கோடிக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியன், அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக இருந்தவர் எஸ்.பாண்டியன். தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி வழங்குவது, தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு இவர் லஞ்சம் வாங்குவதாகவும், தர மறுக்கும் நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wsvUIL
via

No comments